/ தினமலர் டிவி
/ பொது
/ திடீரென இடிந்து விழுந்த 20 அடி உயர கோயில் சுவர்! Temple wall collapsed in Andhra | Narasimha swami
திடீரென இடிந்து விழுந்த 20 அடி உயர கோயில் சுவர்! Temple wall collapsed in Andhra | Narasimha swami
விசாகப்பட்டினத்தில் உள்ள வராஹலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், வருடாந்திர சந்தனோத்ஸவம் நடந்தது. சாமியை தரிசிக்க நேற்றிரவு முதலே பக்தர்கள் காத்திருந்தனர். அதிகாலையில் நடை திறந்ததும், நீண்ட வரிசையில் சென்று சாமி கும்பிட்டனர். 2 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், மழைநீரில் ஊறி இருந்த 20 அடி உயர சுவர், திடீரென இடிந்து தரிசனத்திற்காக வரிசையில் நின்று இருந்த பக்தர்கள் மீது விழுந்தது. 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.
ஏப் 30, 2025