கீரை ஊழல்: RTI மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல் | Tenkasi | Tenkasi Hospital | veggie
தென்காசி தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. உணவு தயார் செய்ய தனியார் ஒப்பந்ததாரர்களிடம் காய்கறிகள், கீரை வாங்கப்படுகிறது. ஒரு கட்டு கீரைக்கு, அதிகபட்சம், 30 ரூபாய் என அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் அதிகாரிகள் ஒரு கட்டு கீரையை, 80 முதல், 100 ரூபாய் வரை விலைக்கு வாங்கியதாக கணக்கு எழுதியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் 6 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, தென்காசி மருத்துவமனை நிர்வாக அலுவலராக இருந்த ஸ்ரீபத்மாவதி, ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், கடையநல்லுாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேஷ்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது குறித்து தகவல் கேட்டார்.