உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசில் சிக்கி கம்பி எண்ணும் தென்காசி வாலிபர் | Tenkasi | Fake currency | Alankulam Police | Invest

போலீசில் சிக்கி கம்பி எண்ணும் தென்காசி வாலிபர் | Tenkasi | Fake currency | Alankulam Police | Invest

தென்காசி ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு, வயது 25. இவர் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ரகசிய தகவல் வந்தது. ஆலங்குளம் போலீசார் மணிகண்ட பிரபு நடவடிக்கையை கண்காணித்தனர். தகவல் உண்மை என தெரிந்ததால் மணிகண்ட பிரபு வீட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் கலர் ஜெராக்ஸ் எடுக்கும் பிரின்டிங் மிஷினை வைத்து ரூபாய் நோட்டு அச்சடித்தது தெரிந்தது. 200, 500 என 30 கள்ள நோட்டுகள் சிக்கியது. அச்சடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டரையும் கைப்பற்றினர். மணிகண்ட பிரபுவை கைது செய்து ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மணிகண்ட பிரபு மீது வழக்குகள் ஏதும் இல்லை. விவசாய வேலை செய்து வந்துள்ளார். திடீர் முயற்சியாக இறங்கி ஆரம்பித்த சில நாட்களில் வசமாக சிக்கி உள்ளார்.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை