உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் ஏட்டு தப்பி ஓடி உயிர் தப்பிய காட்சிகள் |Tenkasi|Alangulam Police|Ambai |Virai Video| CCTV

போலீஸ் ஏட்டு தப்பி ஓடி உயிர் தப்பிய காட்சிகள் |Tenkasi|Alangulam Police|Ambai |Virai Video| CCTV

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே பொத்தை பகுதியை சேர்ந்தவர் இசக்கிப்பாண்டி வயது 30. இவரது மனைவி மகாலெட்சுமி. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் மகாலெட்சுமி நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று உள்ளார். நேற்று இரவு இசக்கிப்பாண்டி தனது நண்பர் ஒருவருடன் மனைவி வீட்டுக்கு சென்றார். மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். மகாலெட்சுமி வர மறுத்ததால், இசக்கிப்பாண்டி தனது நண்பருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் நெட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இரவு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு முருகன் மற்றும் ஒரு பெண் போலீஸ் அங்கு வந்தனர். ரகளையில் ஈடுபட்டிருந்த இசக்கிப்பாண்டியை கண்டித்தனர். நடந்த சம்பவங்களை வீடியோ பதிவு செய்த போது இசக்கிப்பாண்டி வீடியோ எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் ஏட்டு முருகனை தாக்க தொடங்கினார்.

டிச 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ