/ தினமலர் டிவி
/ பொது
/ ATM மிஷினில் பல லட்சம் ரூபாய் தப்பியது எப்படி? | Theft attempt | ATM | Vedasandur | Dindigul
ATM மிஷினில் பல லட்சம் ரூபாய் தப்பியது எப்படி? | Theft attempt | ATM | Vedasandur | Dindigul
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வடமதுரை செல்லும் சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்படுகிறது. வங்கியின் முன்புறம் ஏடிஎம் உள்ளது. இன்று அதிகாலை ஏடிஎம்க்குள் நுழைந்த மர்ம நபர், ATM மிஷினை உடைத்து பணத்தை திருட முயன்றார். அப்போது ATM அறையில் இருந்த அலாரம் ஒலித்ததால், அந்த நபர் பதறி அடித்து ஓட்டம் பிடித்தார். இதனால் ATM மிஷினில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் ATM மிஷினில் இருந்த கைரேகை பதிவுகளை சேகரித்தனர். அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மார் 29, 2025