/ தினமலர் டிவி
/ பொது
/ ஆசிரியரை இழிவாக பேசியவன் திருட்டு வழக்கில் கைது | Theni | Viral student Arrest
ஆசிரியரை இழிவாக பேசியவன் திருட்டு வழக்கில் கைது | Theni | Viral student Arrest
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் முருகன். ஏடிஎம்களில் பணம் வைக்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார். திண்டுக்கல், தேனி சுற்றுவட்டார பகுதியில் 18 ஏடிஎம்கள் இவரது பொறுப்பில் உள்ளது. இவரிடம் நாகஅர்ஜுன் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 15ம் தேதி மாலை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, கே.சிங்காரக்கோட்டை, செம்பட்டி ஏடிஎம்களில் பணம் வைத்துவிட்டு சின்னாளபட்டி நோக்கி பைக்கில் சென்றார் நாகஅர்ஜுன். அப்போது புதுகோடாங்கிபட்டி டாஸ்மாக் அருகே அவரை ஒரு கும்பல் மறித்தது. அவரிடம் இருந்த 29 லட்சம் ரூபாய் பணத்தை கத்தியை கட்டி மிரட்டி பிடுங்கினர்.
ஜூலை 20, 2025