உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மூன்று நாள் தெப்ப உற்சவம் திரள்கிறது பக்தர்கள் கூட்டம் | Theppa Utsavam | Vadapalani Andavar Temple

மூன்று நாள் தெப்ப உற்சவம் திரள்கிறது பக்தர்கள் கூட்டம் | Theppa Utsavam | Vadapalani Andavar Temple

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி லட்சார்சனை துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த லட்சார்ச்சனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால் காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து மூன்று நாள் தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக துவங்கியது. முதல் நாள் தெப்பத்தில் வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். இரண்டாம் நாளான இன்று தெப்பத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், நாளை சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரியுடன் களை கட்டும்.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி