தி.குன்றம் தீபம் உரிமையை காக்க அடுத்த அதிரடி | thiruparankundram | deepam case | hindu issue vs dmk
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் தனி நீதிபதி ஜிஆர் சுவாமி நாதன் மூன்று முறை உத்தரவிட்டும் அதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
அரசு தரப்பு, கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம் உட்பட மொத்தம் 26 பேர் சார்பில் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்களை மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.
1996ம் ஆண்டில் கோர்ட் பிறப்பித்த உத்தரவில் உச்சிப்பிள்ளையார் கோயிலிலும் மாற்று இடத்திலும் தீபம் ஏற்றலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பை பின்பற்றி தேவஸ்தானம் மலை உச்சியில் உள்ள கல்தூண் என்று கூறப்படும் தீபத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு மத்திய தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்பட தமிழக அரசே காரணம். தீபத் தூண் விவகாரத்தில் அரசு, அரசியல் காரணங்களோடு செயல்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண் தான். அது தேவஸ்தான இடத்தில் தான் உள்ளது.
எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும். மேல் முறையீடு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதை மதுரை மாவட்ட கலெக்டர் மேற்பார்வை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கினர்.
முருக பக்தர்களும் இந்து அமைப்பினர்களும் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இதை எதிர்த்தும் மேல்முறையீடு செய்வோம் என்று அடாவடி செய்கிறது திமுக.
இரு நீதிபதிகள் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்று திமுக அமைச்சர் ரகுபதி கூறினார்.
இதை எதிர்கொள்ள திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு மனுதாரர்களும் தயாராகி விட்டனர்.
முதல் கட்டமாக மனுதாரர் ராம ரவிகுமார் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசோ அல்லது மற்றவர்களோ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று அதில் ராம ரவிகுமார் கூறி உள்ளார்.
#ThiruparankundramCase #MaduraiCourtJudgement #DeepamIssue #DMKvsBJP #LegalBattle #Judiciaries #PoliticalDrama #CurrentAffairs #IndianPolitics #CourtDecision #TamilNaduNews #JusticeServed #LegalUpdates #StatePolitics #BJPInTamilNadu #DMK #CivilRights #PoliticalDebate #JudicialSystem #PublicInterest