அந்த ஆடியோ... உடைந்து அழுத தீபம் மனுதாரர் Poorna Chandran | thiruparankundram case | Rama Ravikumar
ஐகோர்ட் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாத திமுக அரசை கண்டித்தும், தீபம் ஏற்றக்கோரியும் மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரை மாய்த்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தீபம் ஏற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்குப்போட்ட மனுதாரர் ராம ரவிக்குமாரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையே, மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று பூர்ணசந்திரன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டர் பிரவீன் குமாரிடம் ஒரு மனுவும் கொடுத்தார்.