/ தினமலர் டிவி
/ பொது
/ அடுத்தடுத்து பறந்த ஆம்புலன்ஸ்; பரபரப்பில் தொழிற்சாலை | Thiruvallur | Shrimp plant | Gas Leak
அடுத்தடுத்து பறந்த ஆம்புலன்ஸ்; பரபரப்பில் தொழிற்சாலை | Thiruvallur | Shrimp plant | Gas Leak
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணை கிராமத்தில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இரண்டு ஷிப்ட்களில் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று சுமார் 120 பேர் பணியில் இருந்தனர். காலை 11 மணி அளவில் திடீரென தொழிற்சாலை உள்ளே அம்மோனியா கேஸ் கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த 40 பேர் மயக்கம் அடைந்தனர். சக ஊழியர்கள் இதை கண்டு அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.
ஜூன் 21, 2026