திருச்செந்தூர் தரிசன டிக்கெட் விவகாரம்: ஐகோர்ட் அதிரடி | Tiruchendur | Illegal dharshan ticket
முருகனின் அறுபடை வீடுகளில் 2வதாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு சுவாமி தரிசனம் செய்ய சட்ட விரோதமாக டிக்கெட் விற்பனை நடப்பதாகவும், தரிசன டிக்கெட்டை முறைப்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த சண்முகராஜன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், பக்தர்கள் கோயிலுக்கு வருவதே மன நிம்மதியை தேடித்தான். அங்கும் சட்டவிரோத செயல்களை அனுமதிக்க முடியாது என்றனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சட்ட விரோத தரிசன டிக்கெட் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்பனையைத் தடுக்க அறநிலையத் துறையும், போலீசும் இணைந்து செயல்பட வேண்டும். சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனை செய்யும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டனர்.