காஷ்மீர் சம்பவம்: பாதுகாப்பு வளையத்தில் திருப்பதி | Tirupati | Tirupati Security | Pahalgam attack
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பஹல்காம் பகுதியில் இன்னும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பதி மலையுயிலும் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருப்பதி திருமலைக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. திருப்பதி மலைப்பாதையின் இணைப்புச் சாலை அருகே வாகனங்களை ஊழியர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர்.