திமுக வேட்பாளரை எதிர்க்கும் 400 பேர்: திருப்பூர் தெற்கில் பரபரப்பு | Tiruppur South Constituency | M
திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முதலிபாளையத்தில் உள்ள பாறைகுழியில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு உண்டாகிறது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சியிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டில் வழக்கு போட்டு, முதலிபாளையத்தில் குப்பை கொட்டப்படுவதுக்கு தடையாணை பெற்றுள்ளனர். தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், திருப்பூர் மேயர் தினேஷ் குமாரிடம் குப்பை பிரச்சனைக்கு நிரத்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, உங்க பத்தாயிரம் ஓட்டு எனக்கு தேவையில்லை என தினேஷ்குமார் சொன்னதாக தெரிகிறது. இப்போது அவர் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து முதலிபாளையத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தனர். ஒரே நேரத்தில் அவர்கள் ஒன்று திரண்டு வேட்பு மனு வாங்க மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். அனைவரையும் தடுத்த போலீசார் 5 ஐந்து பேராக உள்ளே அனுப்பினர். #TiruppurElection2026 #DineshKumar #DMK #Mudalipalayam #GarbageIssue #TamilNaduElections #TiruppurSouth #Protest #PublicAnger #NominationFiling #WasteManagement #TiruppurNews #PoliticalCrisis #VoterProtest #HealthHazard