தேங்கிய தண்ணீரே எமனாக மாறியது | Tiruppur | Rain | Corporation
திருப்பூர் மூர்த்திநகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கிருஷ்ணகுமார் பனியன் நிறுவனத்தில் டைலராக வேலை பார்க்கிறார். சங்கீதாவும் அவ்வப்போது கிடைக்கும் வேலைக்கு செல்வார். குழந்தையை பாட்டியிடம் விட்டு செல்வார்கள். வியாழனன்று மாலை வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 1 மணி நேரத்துக்கு பின் வீட்டின் அருகே தேங்கிய மழைநீரில் குழந்தை உடல் தெரிந்தது.
ஆக 22, 2024