உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேங்கிய தண்ணீரே எமனாக மாறியது | Tiruppur | Rain | Corporation

தேங்கிய தண்ணீரே எமனாக மாறியது | Tiruppur | Rain | Corporation

திருப்பூர் மூர்த்திநகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கிருஷ்ணகுமார் பனியன் நிறுவனத்தில் டைலராக வேலை பார்க்கிறார். சங்கீதாவும் அவ்வப்போது கிடைக்கும் வேலைக்கு செல்வார். குழந்தையை பாட்டியிடம் விட்டு செல்வார்கள். வியாழனன்று மாலை வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 1 மணி நேரத்துக்கு பின் வீட்டின் அருகே தேங்கிய மழைநீரில் குழந்தை உடல் தெரிந்தது.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை