திருப்பூர் மண்ணில் ஊறிப்போன விஷம் | Tirupur | Dying Unites
சிவப்பு கூல்டிரிங்ஸ் மாதிரி இருக்கா? நாங்க குடிக்கிற தண்ணியே இதுதான் திருப்பூர் கூலிபாளையம் நால்ரோடு அருகே உள்ளது நஞ்சராயன்குளம். இந்த பகுதியில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. சாய கழிவு நீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றுவதில்லை. போர் குழாயில் நேரடியாக விடப்படுகிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதனால் நஞ்சராயன்குளம் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து காணப்படுகிறது. போர் குழாய் போடப்பட்டுள்ள வீடுகளில் அடர் சிவப்பு நிறத்தில் தண்ணீர் வருகிறது. நிலத்தடி நீரில் உப்பு தன்மையும் அதிகரித்துள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
ஆக 16, 2024