வாத்து பண்ணையில் கஷ்டப்பட்ட பிஞ்சுகள் மீட்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரத்தில் வாத்து பண்ணை செயல்படுகிறது. இங்கு சிறுவர் இரண்டு பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருப்பதாக, சைல்டு ஹெல்ப்லைன் எண்ணுக்கு புகார் சென்றது. திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரகலாதன், போலீசுடன் வாத்து பண்ணைக்கு சென்று ஆய்வு செய்தார். வாத்து பண்ணை, ஆந்திராவின் சித்தூரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமானது. இதில் 13 மற்றும் 9 வயது சிறுவர்கள் இரண்டு பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மார் 11, 2025