தைரியம் இருக்கா? சட்டசபையில் சீறிய ஸ்டாலின் | TN Assembly | DMk | ADMK | Stalin | Palanisami
சட்டசபையில் இன்றைய கேள்வி பதில் நேரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், குற்றங்கள் நடக்கவில்லை எனக்கூறவில்லை, நடந்துள்ளது. நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்களை போல டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி, சாத்தான்குளம் சம்பவங்களை மறந்து விட கூடாது என பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது தைரியமிருந்தால் எனக்கு பதில் சொல்லி விட்டு செல்ல வேண்டும், இப்படி ஓடுறீங்களே என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் பலர் வெளியேறினர். வெளியே வந்து இது தொடர்பான கேள்விக்கு பழனிசாமி பதில் கொடுத்தார்.