சாலை விரிவாக்கத்திற்காக 'பலியாகும்' நூற்றாண்டு மரங்கள்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வழியாக அவிநாசி வரையுள்ள 38 கிலோ மீட்டர் இருவழி சாலை 4 வழி சாலையாக மாற்றப்படுகிறது. 250 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கி உள்ளன. மேட்டுப்பாளையம் டு அவிநாசி வரை சாலையின் இரண்டு புறங்களிலும் நூற்றாண்டுகள் பழமையான 1400க்கு மேற்பட்ட புளியமரம், வேம்பு, நாவல் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. சாலை விரிவாக்கம் செய்வதற்காக, இந்த பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.
மார் 21, 2025