/ தினமலர் டிவி
/ பொது
/ கழுத்தை பிடித்து கதறும் முதியவர்: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம் | Trichy | Theft | CCTV
கழுத்தை பிடித்து கதறும் முதியவர்: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம் | Trichy | Theft | CCTV
திருச்சி பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, என்எஸ்பி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இரவு நேரங்களில் வியாபாரிகளை தாக்கி வழிப்பறி நடப்பது வாடிக்கையாகிவிட்டது. அதுவும் சிறுவர்கள் கும்பலாக சேர்ந்து கஞ்சா, மது போதையில் வழிப்பறி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. சமீபத்தில் காந்தி மார்க்கெட் சப் ஜெயில் ரோட்டில் தனியாக நடந்து சென்ற முதியவரை 3 சிறுவர்கள் தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 4ம் தேதி மாலை 3 மணிக்கு நடந்த இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. முதியவர் அப்பகுதியில் நடந்து செல்லும் போது மூன்று சிறுவர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஏப் 10, 2025