சரக்கு ரயில் தடைபட்டதால் விநியோகம் பாதிப்பு
திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, லும்டிங் - பதார்புர் இடையிலான ரயில் வழித்தடத்தில் கடந்த மாதம் 31ம் தேதி எரிபொருள் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டது. 5 கி.மீ., தொலைவுக்கு ரயில் பாதை சேதம் அடைந்துள்ளது. அதை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. திரிபுரா மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் ரயில் மூலமாகவே கொண்டுவரப்படுகிறது. சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், அத்தியாவசிய பொருட்களின் வரத்து தடைபட்டுள்ளது.
நவ 10, 2024