கண்ணியத்தை தவிர விட்ட திமுகவினர் | Udhayanidhi | Salem
சேலம் தலைவாசல் டோல்கேட் அருகே துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க திமுகவினர் மேடை அமைத்திருந்தனர். மேடையில் வைக்கப்பட்ட பேனரில் கண்ணியம் என அச்சிடுவதுக்கு பதிலாக இரண்டு சுழி ன போட்டு கன்னியம் என எழுத்து பிழையுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுகவின் கொள்கை வாசகமாக உள்ள கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதே பிழையாக இருந்ததால் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு உண்டானது. இதையடுத்து தலைவாசல் டோல்கேட் வழியாக வந்த உதயநிதி மேடையில் ஏறாமல் கிளம்பினார். காரில் இருந்தபடியே நிர்வாகிகள் கொடுத்த பரிசை வாங்கி சென்றார்.
அக் 19, 2024