உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மார்ச் 2-ல் கலெக்டர் ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு Unconditional Apology Thiruparankundram Cont

மார்ச் 2-ல் கலெக்டர் ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு Unconditional Apology Thiruparankundram Cont

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபதூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன . இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலைஉச்சி தீப தூணில் விளக்கேற்ற கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டார். சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி தமிழக அரசு அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. இதையடுத்து, மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் . இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோயில் செயல் அலுவலர் நாராயணன் கோர்ட்டில் ஆஜராகினர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என ThiruparankundramDeepam #MadrasHighCourt #JusticeGRSwaminathan #ContemptOfCourt #MaduraiBench #ThiruparankundramHill #DeepamCase

பிப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை