மனோஜ் சோனி பதவி விலகியதன் பின்னணி UPSC Chairman Resigs| Manoj Soni
UPSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மனோஜ் சோனி, ராஜினாமா செய்துள்ளார். இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் முன்னதாகவே அவர் பதவி விலகியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் போலி சான்றிதழ் கொடுத்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அது பற்றி விளக்கம் கேட்டு யுபிஎஸ்சி நேட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், யுபிஎஸ்சி தலைவர் பதவி விலகி இருக்கிறார். ஆனால், மனோஜ் சோனியின் ராஜினாமாவுக்கும், போலி சான்றிதழ் சர்ச்சைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என யுபிஎஸ்சி அதிகாரிகள் கூறுகின்றனர். 2 வாரங்களுக்கு முன்பே அவர் பதவி விலகல் கடிதம் கொடுத்து விட்டார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.