அமெரிக்காவை அலறவிடும் அரபு நாடுகளின் பகீர் திட்டம் | US Gaza plan vs Arab Gaza plan | US vs Arab Nat
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் மொத்த காசாவும் சல்லி சல்லியாக நொறுங்கியது. 90 சதவீத வீடுகள் தரைமட்டமாகி விட்டன. போர் நிறுத்தம் வந்த பிறகு அகதிகளாக வெளியேறிய பாலஸ்தீனியர்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பினர். வீடுகள் இன்றி தவித்தனர். டென்ட் அடித்தும், தகர்ந்த கட்டடங்களிலும் குடும்பம் நடத்த துவங்கினர். இதற்கிடையே, இடிந்து கிடக்கும் காசா நகர் மொத்தமும் இனி அமெரிக்காவுக்கு சொந்தம் என்று கூறி உலகத்தையே அதிர வைத்தார் டிரம்ப். பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றி விட்டு காசாவை உலகின் அற்புதமாக நகராக உருவாக்குவோம் என்றும் சொல்லி இருந்தார். மொத்த இஸ்லாமிய நாடுகளும் இதை கேட்டு கொந்தளித்தன. இப்போது அடுத்த அதிர்ச்சி நடந்து விட்டது. அரபு நாடுகள் எல்லாம் ஒரே அணியில் திரண்டு டிரம்புக்கு எதிராக காசாவை வைத்து மெகா திட்டத்தை தயார் செய்து திடுக்கிட வைத்துள்ளன. இதனால் அமெரிக்கா, அரபு நாடுகள் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காசாவை வைத்து டிரம்ப் அப்படி என்ன பிளான் போட்டார்? அமெரிக்காவுக்கு எதிராக அரபு நாடுகள் அணி திரண்டது எப்படி? காசா அடுத்து யார் கைக்கு போகும்? அமெரிக்கா-அரபு நாடுகள் இடையே மோதல் வெடிக்குமா? என்பதை விரிவாக பார்க்கலாம்.