உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உன்னையும் தூக்குவேன்னு சொல்றாரு: எஸ்ஐ மீது பெண்கள் பகீர் புகார் | Uthukottai | Ellampettai village

உன்னையும் தூக்குவேன்னு சொல்றாரு: எஸ்ஐ மீது பெண்கள் பகீர் புகார் | Uthukottai | Ellampettai village

திருவள்ளூர், எல்லம்பேட்டை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் இருந்து 20 டன் மெஷின் பொருட்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் ஊத்துக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க ஊத்துக்கோட்டை எஸ்ஐ பாஸ்கரன் எல்லம்பேட்டை சென்றார். விசாரணை என்கிற பெயரில் வரம்பு மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எல்லம்பேட்டை கிராம மக்கள் சார்பில் எஸ்ஐ பாஸ்கரன் மீது திருவள்ளூர் மாவட்ட எஸ்பி ஆபீஸில் புகார் அளிக்கப்பட்டது. #Uthukottai #Ellampettai #PoliceBrutality #PoliceMisconduct #SexualHarassment #TamilNadu #CrimeNews #VillagersProtest #SpecialSubInspector #HumanRights

செப் 09, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Padmasridharan
செப் 10, 2025 18:58

பெண்களுக்கு மட்டுமல்ல சாமி. சென்னை, திருவான்மியூர் காவலர் சேகர் மற்றும் பலர் இரவு ரோந்து வருவதுண்டு. இளைஞர்களிடம் கூட்டாக மொபைலை பிடுங்கி பணம் பறிப்பதும் இதில் சேகர் என்பவர் மிரட்டி வண்டியில் அறைக்கு கூட்டி செல்வதுமுண்டு. டார்வின் என்ற பெயருக்கு பணம் பரிமாற்றம் நடப்பதுமுண்டு. இவர்களே அந்த காக்கி உடையை அதிகாரத்தை தவறாக காமத்தொல்லைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதெல்லாம் தெரியாமல் கட்சிகள் "காவலர்களுக்கே துன்பங்கள் நடக்கின்றது" என்று ஆளும் கட்சியை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.


D.Ambujavalli
செப் 10, 2025 18:43

இரவு நேரத்தில் விசாரணை என்ற பேரில் எல்லா அடாவடிகளையும் செய்கிறார் என்று தெரிகிறது


Mani . V
செப் 10, 2025 04:39

இந்த காமாந்தக நாயை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்? எது அப்பாவின் துறையை சார்ந்தவர் என்பதால் முடியாதா?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை