கரண்ட், உணவு இல்லாமல் கஷ்டப்பட்டோம் | Uttarakhand | landslides
100 அடி முன்பு நடந்த அந்த கோரத்தாண்டவம்! உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்கள் பகீர் தகவல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர், உத்தராகண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது, தவாகாட் என்ற இடத்தில் மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் நடுவழியில் வழியில் சிக்கி கொண்டனர். மேற்கொண்டு வரமுடியவில்லை. ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் 20 பேர் ரயில் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். எஞ்சிய 10 பேர் சொந்த செலவில் விமானத்தில் இன்று சென்னை திரும்பினர். நிலச்சரிவில் சிக்கி தவித்த தங்கள் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
செப் 17, 2024