உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பு நடந்த துயரம்; 8 பேர் மரணம்

இறங்க வேண்டிய இடத்திற்கு முன்பு நடந்த துயரம்; 8 பேர் மரணம்

உத்ராகண்ட்டில், பித்தோர்கர் மாவட்டத்தில் முன்சியாரில் இருந்து போக்தா கிராமத்திற்கு ஜீப் சென்று கொண்டு இருந்தது. 13 பேர் பயணித்தனர். போக்தா கிராமத்திற்கு அருகே பண்டாரி கிராம பாலத்தில் ஜீப் திரும்பும்போது, அருகே உள்ள 100 அடி பள்ளத்தில் பாய்ந்து ஆற்றின் நடுவே விழுந்தது. பாறைகள் நிறைந்த ஆற்றில் தண்ணீர் கொஞ்சமாகவே ஓடிக்கொண்டிருந்தது. கீழே விழுந்த ஜீப் நொறுங்கியது. இதில் 3 பள்ளி மாணவர்கள், 2 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். எஞ்சிய 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் சீரியஸ் ஆக உள்ளனர்.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ