மூழ்கும் மார்க்கெட்; தீர்வு கோரி அமைச்சரிடம் மனு | uzhavar sandhai | Dipped in rain water | Madurai
மழையால் தெப்பக்குளமாக மாறியது உழவர் சந்தை! ரோட்டில் கடை விரித்த விவசாயிகள் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை கிழக்கில் உள்ள ஆனையூர் உழவர் சந்தை முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் மாறியது. 25க்கு மேற்பட்ட கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகள் மூழ்கின. மார்க்கெட்டில் தண்ணீர் சூழ்ந்ததால் ரோட்டோரத்தில் விவசாயிகள் கடை விரித்தனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக போலீசார் அவர்களை விரட்டினர். இதனால் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான மூர்த்தியை சந்தித்து உழவர் சந்தை விவசாயிகள் மனு அளித்தனர்.