/ தினமலர் டிவி
/ பொது
/ புதருக்குள் தூக்கி செல்லப்பட்ட பெண்கள்: தேனியில் நடந்தது என்ன? | Theni | veerapandi Police
புதருக்குள் தூக்கி செல்லப்பட்ட பெண்கள்: தேனியில் நடந்தது என்ன? | Theni | veerapandi Police
தேனி, வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் ஆற்றங்கரை பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் மறைவாக இருப்பதால் அங்கே இரவு நேரங்களில் மது போதை ஆசாமிகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், செவ்வாயன்று இரவு இரண்டு இளம்பெண்கள் தங்களது ஆண் நண்பர்களுடன் ஆற்றங்கரைக்கு வந்தனர். அவர்களை மறைந்திருந்து கண்காணித்த போதை கும்பல் சத்தமில்லாமல் அருகில் நெருங்கினர். ஆண் நண்பர்களை அடித்து விரட்டிவிட்டு, இரு பெண்களையும் புதர் நிறைந்த மறைவான பகுதிக்கு தூக்கி சென்றனர்.
ஜூலை 31, 2025