உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்த கொடியேற்றம் | Velankanni thiruvizha | Flag hoisting

லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடந்த கொடியேற்றம் | Velankanni thiruvizha | Flag hoisting

திரண்டது பக்தர்கள் கூட்டம் அதிர்ந்தது வேளாங்கண்ணி! விண்ணை பிளந்த மரியே வாழ்க கோஷம்! உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு மாலை பேராலயத்தில் இருந்து மாதா திருவுருவம் பொரித்த கொடியினை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலை 6.30 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியினை புனிதம் செய்த பின், லட்சக்கணக்கான மக்களின் மரியே வாழ்க கோஷம் விண்ணை பிளக்க கொடிமரத்தில் மாதா கொடி ஏற்றப்பட்டது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !