/ தினமலர் டிவி
/ பொது
/ வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் கோர்ட்டில் ஆஜர் | Vengaivayal case | Pudukkottai
வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் கோர்ட்டில் ஆஜர் | Vengaivayal case | Pudukkottai
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2022 டிசம்பரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், ஜனவரியில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரும் தான் முன் விரோதம் காரணமாக அங்குள்ள தொட்டியில் மனிதக்கழிவை கலந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
மார் 11, 2025