ஓட்டலில் சாப்பிட்ட உணவில் தவளை! குடும்பம் ஷாக் | Chennai | hotel Viral Video
Breath பூந்தமல்லி பஸ் ஸ்டாப் அருகே தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சனி மதியம் சாப்பிட வந்த ஒரு குடும்பத்தினர் பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது மட்டன் குழம்பில் முழு தவளை ஒன்று இறந்த நிலையில், பரிமாறப்பட்டுள்ளது. இதை கண்டு ஷாக் ஆன குடும்பத்தினர் வீடியோ பதிவு செய்தனர். தொடர்ந்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்ட போது, அவர்கள் உரிய பதிலை அளிக்காமல் மழுப்பியுள்ளனர். சாப்பிட்ட உணவுக்கு பணத்தை கொடுத்து கிளம்பிய அந்த குடும்பம் தவளை இருந்த உணவு தொடர்பான வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். உணவில் தவளை இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.