வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வெட்டி பந்தா. நான் அனுபவித்தது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர் காணலுக்கு மத்திய அரசு நிறுவனம் எல்லோரும் வரவேற்பறையில் சுமார் 20 பேர் காத்து இருந்தோம். அப்போது ஒரு உயர் அதிகாரி உள்ளே வந்து என்ன ஒரே கூட்டம் என்று வினவினார். நாங்கள் மரியாதையுடன் நேர் காணலுக்கு வந்து உள்ளோம் என்று கூறினோம். உடனடியாக அவர் வேறு அதிகாரியை கூப்பிட்டு "என்னிடம் சொல்லாமல் ஏன் நேர் காணலுக்கு அழைத்தார்கள். அதை ரத்து செய்யுங்கள் என்று இரக்கமில்லாமல் எங்கள் எதிரிலேயே பந்தா செய்து கூறினார். அந்த அதிகாரி எங்களிடம் இன்று நேர்காணல் ரத்து செய்யப்பட்டது. பிறகு தெரிவிக்கிறோம். நீங்கள் எல்லாம் செல்லுங்கள் என்று மிகவும் வேதனையுடன் வருத்தப்பட்டு சொன்னார். தொலை தூரத்தில் இருக்கும் அந்த அலுவலகத்திற்கு வெளி ஊரில் இருந்துபெல்லாம் வந்து இருந்தனர். வேறு ஒன்றும் தர்ணா போன்றவை செய்ய தெரியாமல் நாங்கள் திரும்ப வீட்டுக்கு சென்றோம். அட்லீஸ்ட் நேர் காணல் நடத்தி எங்களுக்கு வேலை கிடைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை .எங்கள் ஆர்வத்தை அப்படியே அழித்து விட்டார் அந்த பந்தா அதிகாரி. ஆகையால் இது ஒன்றும் புதியது அல்ல. செய்தியாக வருவதுதான் புதிது
ஒரு நாளைக்கு இந்த கூத்து நான் தினமும் அலுவலகத்தில் எத்தனை கூத்து அடிக்கிறாரோ இந்த ஆளு தெரியல. இப்படித்தான் வகை வகையா செலவு பண்ணி நஷ்டத்தில் இருக்குது பி எஸ் என் எல்