/ தினமலர் டிவி
/ பொது
/ மாயமான முன்னாள் ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம் | Virudhunagar | Kariyapatti | Dinamalar
மாயமான முன்னாள் ராணுவ வீரருக்கு நேர்ந்த கொடூரம் | Virudhunagar | Kariyapatti | Dinamalar
விருதுநகர், காரியாபட்டி அருகே மேல அழகிய நல்லூரை சேர்ந்தவர் துரைப்பாண்டி. வயது 62. முன்னாள் ராணுவ வீரர். சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். மனைவி மலர்விழி கடந்த 1ம் தேதி போலீசில் புகார் அளித்தார். துரைபாண்டி வங்கி கணக்கில் இருந்து காரியாபட்டி அருகே ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்த ராம்குமாரின் வங்கி கணக்கிற்கு அதிகளவு பணம் அனுப்பப்பட்டு இருந்தது. இதை கண்டுபிடித்த போலீசார், சந்தேகம் அடைந்து ராம்குமாரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் உண்மை வெளியானது.
மார் 13, 2025