/ தினமலர் டிவி
/ பொது
/ ஏர் இந்தியாவுடன் இணைவதால் கடைசியாக பறக்கும் 'விஸ்தாரா' | vistara | air india | singapore airlines
ஏர் இந்தியாவுடன் இணைவதால் கடைசியாக பறக்கும் 'விஸ்தாரா' | vistara | air india | singapore airlines
குட் பை சொல்லும் விஸ்தாரா இன்றுடன் டிக்கெட் க்ளோஸ்! டாடா நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் விஸ்தாரா விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. 2015 ஜனவரி முதல் தனி பிராண்ட் பெயரில் பறக்க தொடங்கியது. இதில் டாடா குழுமத்தின் பங்கு 51சதவீதம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்கு 49 சதவீதமாக இருந்தது. உள்நாட்டு விமானத்தில் பிரீமியம், எகானமி என்ற வசதியை முதன் முதலில் அறிமுகம் செய்தது விஸ்தாரா. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய பின், விஸ்தாரா நிறுவனத்தை ஏர் இந்தியாவுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
நவ 11, 2024