உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விழிஞ்சம் துறைமுகம் திறப்பு: இந்தியாவின் வருவாய் அதிகரிக்கும் Vizhinjam Sea port| Kerala News| Modi

விழிஞ்சம் துறைமுகம் திறப்பு: இந்தியாவின் வருவாய் அதிகரிக்கும் Vizhinjam Sea port| Kerala News| Modi

கேரளாவின் திருவனந்தபுரத்தில் அதானி நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனாவால், சுரேஷ் கோபி, காங்கிரஸ் எம்பி சசி தரூர், கலந்து கொண்டனர். சர்வதேச கப்பல் வழித்தடத்துக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள விழிஞ்சம் துறைமுகத்தில், மிகப் பெரிய சரக்கு கப்பல்களை கையாள முடியும் என்பதால், கப்பல் போக்குவரத்து மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் பெருமளவு உயர வாய்ப்புள்ளது. நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகம் என்ற பெருமைக்குரிய விழிஞ்சம் துறைமுகம் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதனால் குறைந்த நேரத்தில் அதிக சரக்குகளை கையாள முடியும்.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை