/ தினமலர் டிவி
/ பொது
/ வக்பு சட்டத்தை திருத்த இது தான் மூல காரணம்!|Waqf Act Amendment Bill|Central Govt |Tiruchi village
வக்பு சட்டத்தை திருத்த இது தான் மூல காரணம்!|Waqf Act Amendment Bill|Central Govt |Tiruchi village
திருச்சி திருச்செந்துறை கிராமம் முள்ளிகளப்பூரைச் சேர்ந்தவர் ராஜகோபால். 2022ல் இவர் தனக்கு சொந்தமான 1.2 ஏக்கர் நிலத்தை விற்க சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். அந்த கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை என பதிவுத்துறை தலைவரிடம் இருந்து அறிவிப்பு வந்ததாக சார் பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. நிலத்தை விற்க தடையின்மை சான்று பெற வேண்டும் என தமிழக வக்பு வாரியம் உத்தரவு அடிப்படையில் பதிவுத்துறை தலைவர் இந்த அறிக்கையை பிறப்பித்தது தெரிய வந்தது. இதேபோல பல கிராமங்களிலும் சர்ச்சை ஏற்பட்டு மக்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவானது.
ஆக 10, 2024