வக்பு வாரிய உத்தரவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு | Waqf Council | Waqf Board
மசூதிகளில் ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று சிறப்பு தொழுகைகள் நடக்கும். அப்போது இமாம் அல்லது முத்தவல்லிகள் இஸ்லாமிய சொற்பொழிவு ஆற்றுவார்கள். சொற்பொழிவுக்கு இனி அனுமதி அவசியம் என சத்தீஸ்கர் வக்பு வாரியம் கூறியுள்ளது. இது குறித்து சத்தீஸ்கர் வக்பு வாரிய தலைவர் சலீம் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மசூதிகளில் தொழுகைக்கு பின் சொற்பொழிவாற்ற இனி வக்பு வாரியத்தின் அனுமதி அவசியம். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சொற்பொழிவுகளின் போது சில கருத்துகள் சர்ச்சையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் தவறான கருத்து விதைக்கப்படுகிறது. மதக்கலவரம் உருவாகும் என அஞ்சப்படுகிறது. இதை தவிர்த்து சொற்பொழிவின் போது சிறுபான்மையினருக்கான அரசு திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கலாம். மசூதிகள் மற்றும் தர்காக்களில் கருத்து பரிமாற்றம் எல்லை மீறுவதை வக்பு வாரியம் விரும்பவில்லை என சலீம் ராஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநில மசூதிகளிலும் அமல்படுத்த வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சலீம் ராஜ் கடிதம் எழுதியுள்ளார்.