நிலச்சரிவு பகுதியில் என்ன தான் நடக்குது? | Wayanad | Wayanad Landslide
கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 300ஐ தாண்டி விட்டது. சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி கிராமங்கள் சிதைந்து சேறுகளால் நிரம்பி உள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான மக்கள் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. பேரிடர் மீட்பு படை, ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ராணுவத்தின் தேடுதல் பணியில் இப்போது இஸ்ரோவும் இணைந்துள்ளது. அதிநவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்புப் பணி நடக்கிறது. புதைந்த பகுதிகளுக்குள் பலர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆக 02, 2024