/ தினமலர் டிவி
/ பொது
/ இன்னும் 250 பேர் மாயம்; தேடும் பணியில் மீட்பு குழு wayanad| land slide| kerala| mundakkai
இன்னும் 250 பேர் மாயம்; தேடும் பணியில் மீட்பு குழு wayanad| land slide| kerala| mundakkai
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை ஊர்கள் மண்ணில் புதைந்தன. 5 நாட்களாக மீட்பு பணிகள் நடக்கின்றன. இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 250 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது. தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி சமீரன் தலைமையிலான குழுவினர் வயநாடு சென்று, தமிழர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் 24 பேர் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 21 பேர் வயநாட்டில் குடியேறியவர்கள். காளிதாஸ், கல்யாண், சிராபுதீன் ஆகிய 3 பேர் வேலைக்காக சென்று தங்கியிருந்தவர்கள்.
ஆக 03, 2024