நீண்ட நேரம் போராடி நீந்தி கரை சேர்ந்த யானை | Wild elephant that fell in to the shutter | Periyar
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் தேக்கடி வனத்துறை சோதனைச் சாவடி அருகே உள்ளது. தேக்கடி ஏரியில் இருந்து ஷட்டர் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு திறவை வாய்க்கால் உள்ளது. இங்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை ஷட்டருக்குள் தவறி விழுந்தது. ஷட்டரில் சிக்கி நீண்ட நேரம் வெளியே வர முடியாமல் யானை போராடியது. இதனால் தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. விஷயத்தை கேள்விப்பட்ட கேரள வனத்துறையினர் யானையை மீட்க விரைந்துவந்தனர். தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டதால் வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் யானை நீந்தி சென்று கரை ஏறி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.