எக்ஸ்ரேவை பேப்பரில் பிரின்ட் எடுத்து தருவது இதனால்தான்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த காளி பாண்டி. ஹோட்டல் மாஸ்டர். பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர் பரிந்துரைப்படி, மருத்துவமனையில் உள்ள பிரிவில் எக்ஸ்ரே எடுத்தார். ஆனால், எக்ஸ்ரே ரிப்போர்ட்டை ஃபிலிமில் தராமல் காகிதத்தில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர். இது பற்றி கேட்டால் ஃபிலிம் தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் கூறியதாக காளி சொன்னார். தனியார் மருத்துவமனைக்கு போனால், எக்ஸ்ரே ஜெராக்ஸ் காப்பியை ஏற்க மறுப்பதால் அதிக பணம் கட்டி வெளியில் எக்ஸ்ரே எடுக்க வேண்டி உள்ளதாக கூறினார்.
நவ 10, 2024