பதவியை விரும்பும் தலைவர்களின் தில்லாலங்கடி வேலை அம்பலம்! Youth Congress | Online Membership | Tamiln
தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகம் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்காக, உறுப்பினர்கள் சேர்க்கை, ஐ.ஒய்.சி எனும் செயலி வழியே ஜனவரியில் நடந்தது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு, 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பணம் செலுத்தி, உறுப்பினராக சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டளிக்க முடியும். எனவே மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட விரும்பியவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை உறுப்பினராக சேர்த்தனர். அவர்களுக்கு தாங்களே பணம் கட்டினர். சில மாவட்டங்களில், புடவை, பேன்ட் சட்டை, குடம், வாளி, வெள்ளி நாணயங்கள் போன்றவை கொடுத்து உறுப்பினர்களாக சேர்த்தனர். சில மாவட்டங்களில், போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, டில்லி மேலிடத்துக்கு, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தகவல் அனுப்பினர். அதைத் தொடர்ந்து, போலி உறுப்பினர்களை நீக்கிய பின், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், புதிய உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் வாயிலாக, உண்மையான உறுப்பினர்களை சரிபார்க்கும் பணி துவங்கி உள்ளது.