கரூர் சம்பவத்துக்கு பின் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அதிர்ச்சி | Aadhav Arjuna | TVK | Karur Tragedy
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகளும் தவெக, பாஜ கட்சிகளும் நிவாரணம் அறிவித்துள்ளன.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தரப்பு தலைவர்கள் பேசவில்லை என்கிற விமர்சனம் எழுந்த நிலையில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்.
இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது.
மரணத்தின் வலி, அந்த மக்களின் அழுகுரலை கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன்.
அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள்.
இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள்.
அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.
இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும்.
இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக இதனை உறுதியுடன் கூறுகிறேன்.
துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இந்த வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும் என ஆதவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
#KarurTragedy
#AadhavArjuna
#TVKRally
#KarurStampede
#TamilNaduGrief
#VijayRally
#PeopleCriesKarur
#TVKTragedy
#JusticeForKarur
#KarurVictims