விரைவில் வருகிறது அதிமுகவில் மாற்றம்! | ADMK | Palanisamy
2026 சட்டசபை தேர்தலுக்கு முழு முனைப்புடன் கட்சியை தயார் செய்ய வேண்டிய கட்டாயம், அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்கட்சியின் மா.செ.கள் தங்களை யாரும் மாற்ற முடியாது என்ற எண்ணத்தில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளை அளித்து, மற்றவர்களை ஒதுக்குவதாக பல மாவட்டங்களில் புகார்கள் எழுந்து கட்சி தலைமைக்கும் சென்றது. நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 10 பேர் கொண்ட குழுவை பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார். பல மாவட்டங்களில் கள ஆய்வுக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில், நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பிப் 08, 2025