அதிமுக பேனர் அகற்றம்; போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை | ADMK | EPS | Trichy
அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி 23முதல் 25ம் தேதி வரை திருச்சியில் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் அதிமுகவினர் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர். அனுமதி இன்றி பேனர் வைத்ததாக கூறி போலீசார் அவற்றை அகற்றினர். இதை கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி , வளர்மதி தலைமையில் அதிமுகவினர் ஶ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சு நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
ஆக 19, 2025