/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போதைக்கு அடிமையானவர்கள் பற்றி அமித்ஷா ஷாக் ரிப்போர்ட் | Ruthless war | Amit shah
போதைக்கு அடிமையானவர்கள் பற்றி அமித்ஷா ஷாக் ரிப்போர்ட் | Ruthless war | Amit shah
போதை பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு மாநாடு டில்லியில் இன்று நடந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையேற்று பேசுகையில், நாட்டின் எதிர்கால சந்ததியை காக்க போதை பொருட்களுக்கு எதிரான சமரசம் இல்லா போர் இன்றைய அவசர தேவையாக இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமை ஆகி உள்ளனர். போதைக்கு எதிரான பணியை இப்போதே துவங்காவிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் அது மிகவும் கால தாமதம் ஆகிவிடும்.
ஜன 11, 2025