/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்காங்க | Anbumani | PMK | Tamilnadu Police
பக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்காங்க | Anbumani | PMK | Tamilnadu Police
கொலை நடக்காத நாளே இல்லை? 3ல் 2 போலீசுக்கு தெரிந்தே நடந்தது தமிழகத்தில் கொலை நடக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளtது என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த 100 அடி சாலையில் மனோஜ் என்ற கஞ்சா வியாபாரி கொடூரமான முறையில் ஓட, ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட சென்ற போது அவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்திருக்கிறது. இதில் இருந்தே தமிழகத்தில் கொலையாளிகள் காவல்துறை மீது எந்த அளவுக்கு அச்சமின்றி துணிச்சலுடன் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மார் 21, 2025