/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வெள்ளத்தால் பாதித்தவரை கன்னத்தில் அறைந்த பெண் விஏஓ | Andhra flood | Woman VAO
வெள்ளத்தால் பாதித்தவரை கன்னத்தில் அறைந்த பெண் விஏஓ | Andhra flood | Woman VAO
ஆந்திராவில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழை பெரும்பாலான மாவட்டங்களை மூழ்கடித்தது. எதிர்பாராத மழை வெள்ளம் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. இப்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில், பாதித்த மக்களுக்கு அரசு, தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடா அஜித் சிங் நகரில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 கிலோ அரிசி, ஒரு லிட்டர் எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வருவாய்துறையினர் வழங்கினர்.
செப் 11, 2024