/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக அரசின் மர்மங்கள்: அண்ணாமலை சரமாரி கேள்வி Annamalai BJP | DMK Attack | Anna Nagar Case
திமுக அரசின் மர்மங்கள்: அண்ணாமலை சரமாரி கேள்வி Annamalai BJP | DMK Attack | Anna Nagar Case
அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி அண்ணாமலை பகீர் சென்னை அண்ணாநகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் 31 வயது சதிஷ் மீதும், பக்கத்து வீட்டை சேர்ந்த 14 வயது சிறுவன் மீதும் தாய் புகார் கூறியிருந்தார். புகாரை முறையாக விசாரித்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த சிறுமியின் பெற்றோர்களையே போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி விரிவாக பத்திரிகையில் செய்தி வந்தபிறகே சதீஷும், சிறுவனும் கைது செய்யப்பட்டனர்.
ஜன 08, 2025